வள்ளியூர், டிச.3: வள்ளியூர் சாமியார் பொத்தை புரம் முத்துகிருஷ்ணசுவாமியின் 106வது குருபூஜை விழாவை முன்னிட்டு புரம் மகாமேரு மண்டபத்தில் இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் பரதநாட்டியம் நடந்தது. முத்துகிருஷ்ணசுவாமி ஜீவசமாதி அடைந்த சாமியார் பொத்தை புரத்தில் மகாமேரு மண்டபம் அமைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகிறது. ஆண்டு தோறும் வெகு விமரிசையாக நடக்கும் முத்துகிருஷ்ண சுவாமியின் 106வது குருபூஜை மற்றும் குரு ஜெயந்தி விழா டிச.1ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனைதொடர்ந்து நேற்று இரண்டாம் நாள்நிகழ்ச்சியில் காலையில் விசேஷ பூஜைகள் நடந்தது. மாலை 5.30 மணியளவில் மதி ஊர்மிளா சத்தியநாராயணா குழுவினரின் சங்கல்ப சமர்ப்பணம் பரதநாட்டியம் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.